Saturday, May 12, 2018

தொழில் (05) – கட்டை பை தயாரித்தல் NON OVEN STICK BAG

தொழில் (05) – கட்டை பை தயாரித்தல் (NON OVEN STICK BAG) 

தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.

 
பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப்   பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

துணிக்கடைகளில் அதிகமாக துணி வாங்கும் போதும் மளிகை கடையில் பொருட்கள் வாங்கும் போதும் இந்த கட்டை பையில் போட்டு பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த நான்-ஓவன் கட்டை பை பிளாஸ்டிக் மற்றும் சணல் பைகளுக்கு மாற்றாக வந்துள்ளது. இந்த நான்-ஓவன் கட்டை பைகளை மறு உபயோகமாக அன்றாட பொருட்கள், துணிகளை எடுத்து செல்ல பயன்படுத்தலாம். இது எளிதில் கிழியாது. தரமாகவும் கடையின் பெயர், முகவரி மற்றும் அதன் விளம்பரம் இடம் பெற்றிருக்கும்.
சிறப்பம்சங்கள் :-
  • அனேக ஜவுளிக் கடைகளில் அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது.
  • ஒவ்வொரு பையும் தையல் இயந்திரத்தில் தரமான நூலினை கொண்டு   தைப்பதால் வலிமையாக இருக்கும்.
  • வாடிக்கையாளரின் தேவைக்கேற்ற டிசைனில் விளம்பரத்தை அச்சிட்டு   தருவதற்கு இயந்திரங்கள் உள்ளது.
  • இந்த அச்சு இயந்திரத்தில் நான்-ஓவன் பைகள் தவிர இதர சாதாரண அச்சு எந்திரமாகவும் உபயோகிக்கலாம்.
  • இதன் தேவை அதிகம். நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.
  • இந்த தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட மதிப்பிடு     : 10 லட்சம் (2 லட்சம் நடைமுறை மூலதனம்)

அரசு மானியம் : 25-35% PMEGP Scheme / 25% NEEDS Scheme

தொழில் (04) – ப்ளை ஆஸ் ப்ரிக்ஸ் Fly Ash Bricks

 தொழில் (04) – ப்ளை ஆஸ் ப்ரிக்ஸ் (Fly Ash Bricks) 

தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.

பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்
கட்டுமானத் துறையில் செங்கற்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தும் கற்கள் தான் இந்த ப்ளை ஆஸ் ப்ரிக்ஸ். செங்கற்களுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக கட்டுமானத் துறையில் ஒரு மாற்று தொழில்நுட்பமாக நிலக்கரி சாம்பலை கொண்டு தயாரிக்கப்பட்டும் இந்த வகை கற்கள் தான் இப்போது பரவலாக கட்டிடம் கட்ட பயன்படுத்த படுகிறது. ப்ளை ஆஸ் ப்ரிக்ஸ் நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு மற்றும் ஜிப்சம் கொண்டு தயாரிக்கப்படுவதால் மிகவும் வலிமையுடையதாக இருக்கும்.

சிறப்பம்சங்கள் :-
  • தற்போது மண்ணிலிருந்து செங்கல் தயாரிக்க அரசு பல்வேறு கட்டுபாடுகளையும், தடைகளையும் விதித்துள்ளதால் இந்த ப்ளை ஆஸ் ப்ரிக்ஸ் தயாரிப்பது எளிதானது.
  • கட்டுமானத்திற்கு எளிதானது.
  • வேலையாட்கள் குறைவு, இதில் வேஸ்டேஜ் குறைவு.
  • நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.
  • அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம். 

திட்ட மதிப்பிடு : 25 லட்சம் (2.00 லட்சம் நடைமுறை மூலதனம்)

அரசு மானியம் : 25% NEEDS Scheme / 25-35% PMEGP Scheme

தொழில் (03) –ஆட்டோ பவர் லூம் Auto Power Loom

 தொழில் (2) –ஆட்டோ பவர் லூம் (Auto Power Loom)

 தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.

பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
ஆட்டோ பவர் லூம் என்பது நவீன முறையில் தறி நெய்வதாகும். இந்த தறிகள் தரமானதாகவும், மிக வேகமாகவும் துணிகள் நெய்யும் தன்மையுடையவை. இந்த வகை தறிகளில் சர்டிங் துணிகள், பேன்ட் துணிகள், தவல் துணிகள் என பலவகை துணிகள் தயாரிக்கலாம். இவை தானாகவே துணிகளை நெய்யும். இந்த வகை தறிகளில் 60 கவுண்ட் நூல்களைக் கொண்டு தயாரிக்கலாம். 50 முதல் 80 வரை பிக்ஸ் உள்ள தறிகள், இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 7 ½ மீட்டர் முதல் 9 மீட்டர் வரை துணி நெய்ய முடியும்.

சிறப்பம்சங்கள் :-
⦁ இந்த தறிகள் தொடர்ந்து ஓடக் கூடியது. இந்தியாவில் கிடைக்கும் தரமான தறியாகும்.
⦁ வெளிநாடுகளில் இருந்து செகனன்ட் தறியாக கூட வாங்கலாம்.
⦁ 320 முதல்  450 ஆர்பியம் வரை ஓடக் கூடிய தறிகள். பெரும்பாலான துணி நிறுவனங்கள் இந்த வகை தறியில் துணி தயாரித்து கொடுக்க ஆர்டர் கொடுப்பார்கள்.
⦁ அதிக தேவை இருப்பதால் நூல் மற்றும் தேவையான மூலப் பொருட்களை துணி நிறுவனமே வழங்கும்.
⦁ ஆர்டரின் பேரில் தேவைக்கும், தரத்திற்கும் ஏற்ற முறையில் தயாரித்து கொடுக்கலாம். நல்ல லாபம் தரும் தொழில்.
⦁ இந்த தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம். \

திட்ட மதிப்பிடு:  100 லட்சம்

அரசு மானியம்:   25% NEEDS Scheme

தொழில் (02) –ஷாப்பிங் பேப்பர் பேக் Shopping Paper Bags


தொழில் (03) –ஷாப்பிங் பேப்பர் பேக் (Shopping Paper Bags) 

 தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.

பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
பிளாஸ்டிக் ஷாப்பிங் பையை உபயோகிப்பது சுற்றுப்புறசூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும். பல இடங்களில் அரசு பிளாஸ்டிக் பைகளை தடை செய்துள்ளதால் பேப்பர் பைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே பேப்பர் பேக்ஸ் ஷாப்பிங் கடைகளில் பயன்படுத்துவது சிறந்தது. தற்போது பேப்பர் பேக்ஸ் பல்வேறு வண்ணங்களில் தடிமனான பேப்பர்களில் தயாரித்து விற்பனை செய்தால் சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும். விலையுயர்ந்த பொருட்களை இப்படி வண்ண பேப்பர் பைகளில் வைத்து கொடுப்பதை கடைகள் வாடிக்கையாக கொண்டுள்ளது. நல்ல உறுதியான பேப்பரில் பார்ப்பதற்க்கு அழகான டிசைனில் கைப்பிடியுடன் பைகள் வருவதால் மக்கள் இதனை எளிதாக பெற்று செல்வர்.

சிறப்பம்சங்கள் :-
⦁ ஓன்று அல்லது இரண்டு வண்ணங்களில் கடையின் பெயர் மற்றும் படங்களை அச்சிட்டு வழங்குவதால் கடைகளுக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும்.
⦁ இது பிளாஸ்டிக்கிற்கு மாற்றாகவும் சுற்றுப்புற சூழலை பாதிக்காமல் இருப்பதாலும் அரசும் இதற்கு ஆதரவு தருகிறது.
⦁ இயந்திரங்களை கொண்டு தரமான முறையில் தயாரிப்பதால் இதன் தரமும், உறுதியும் அதிகம். ஒரு நாளைக்கு 3000 பைகள் வரை தயாரிக்கலாம்.
⦁ நல்ல லாபகரமான தொழில் அனைத்து மூலப் பொருட்களும் எளிதில் கிடைக்கின்றன.
⦁ இந்த தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட மதிப்பிடு: 05 லட்சம்

அரசு மானியம்: 25 UYEGP Scheme

தொழில் (01) – டயர் ரீ-டிரேடிங் Tyre Re-Trading


புதிய தொழில் (03) – டயர் ரீ-டிரேடிங் (Tyre Re-Trading)

 தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.

பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
இன்றைய இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மிக அதிகம். இந்த வளர்ச்சி அடைய சரக்கு மற்றும் போக்குவரத்து மிக முக்கியமானது. இதில் குறைந்த பட்ச சரக்குகள் ஒரு இடத்தில் இருந்து நாட்டின் பல இடங்களுக்கு கொண்டு செல்வது கனரக வாகனங்கள். இந்த கனரக வாகனங்கள் இயங்க டயர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த டயர் பெரும்பாலும் ஒரு குறிப்பிட கிலோமீட்டர் வரை நல்ல நிலையில் ஓடும். பின்னர் தேய்மானம் அடைந்து விடும். புதியாக டயர் வாங்கி பொருத்தினால் அதிக செலவாகும். எனவே தேய்மானம் அடைந்த பழைய டயரினை மீண்டும் ரீ-டிரேடிங் முறையில் தேய்மானம் அடைந்த பகுதியை புதுப்பித்து  மீண்டும் பயன்படுத்தலாம்.

பெரும்பாலும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கனகரக வாகனங்களின் டயர்களை மாற்ற வேண்டும் அல்லது ரீ-டிரேடிங் செய்து பயன்படுத்த வேண்டும். ஒரு டயரை மூன்று முறை ரீ-டிரேடிங் செய்து பயன்படுத்தலாம். ஒவ்வொரு நாளும் பெருகிவரும் வாகனங்களால் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ள தொழில்.

 சிறப்பம்சங்கள் :-
⦁ லாரிகள் மற்றும் பேருந்துகள் என அனைத்து வாகன டயர்களுக்கும் ரீ-டிரேடிங் செய்யலாம்.
⦁ புதிய டயர் வாங்கும் விலையை விட நான்கில் ஒரு பங்கு மிக குறைந்த விலையில் இருப்பதால் அனைவரும் இதனை தேர்வு செய்கின்றனர்.
⦁ நவீன இயந்திரங்களை கொண்டு தரமான முறையில் தயாரிப்பதால் இதன் தரமும், உறுதியும் அதிகம். இதில் 400 மற்றும் 1200 டயர்கள் தயாரிக்கும் வகையில் இயந்திரங்கள் உள்ளன.
⦁ நல்ல லாபகரமான தொழில் அனைத்து மூலப் பொருட்களும் எளிதில் கிடைக்கின்றன.
⦁ இந்த தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட மதிப்பிடு :  40 லட்சம் + நடைமுறை மூலதனம் 26 லட்சம்

அரசு மானியம் :  25-35% PMEGP Scheme / 25% NEEDS Scheme

Friday, May 11, 2018

Ladies Tailoring Shop

தொழில் (01)பெண்கள் தையலகம் (Ladies Tailoring Shop)

சி.ஆர் பிசினஸ் சொலுசன்ஸ் – தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.
பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் தங்களுடைய உடைகளை அவர்களுக்கு பொருந்தும் வகையில் நவநாகரீகமான உடைகளை உடுத்துகின்றனர். பெரும்பாலும் விழாக் காலங்கள், திருமணம் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் விதவிதமான புதிய வகை உடைகளை உடுத்த ஆரம்பித்து உள்ளனர். கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மகளிரும் இன்று நவநாகரீக உடைகளையே தேர்வு செய்கின்றனர். நமது நாட்டு மங்கையரின் முக்கிய உடை சேலை மற்றும் சுடிதார். சேலையின் நிறத்திற்கு ஏற்ற ஜாக்கெட் அணிவது சிறப்பாக இருக்கும்  இதையே பெண்கள் விரும்புகின்றனர். எனவே ஜாக்கெட் பல்வேறு டிசைனில் விருப்பத்திற்கு ஏற்ப எம்பிராய்டு செய்து தைத்து உடுத்த ஆர்வமுடன் இருகின்றனர். இதனை சிறந்த முறையில் பெண்கள் தையலகம் செய்து தருகிறது.

சிறப்பம்சங்கள் :-
⦁ பெண்கள் தங்களுக்கு தேவையான சுடிதார், ஜாக்கெட் போன்ற ஆடைகளை சரியான அளவில் பிரத்யேகமாக தைத்து உடுத்துவது வழக்கம். இதற்கு தையலகம் உதவுகிறது.
⦁ பெண்கள் தையலகம் பெண்களால் நடத்தப்படுவது மிக அவசியம். நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதால் தையல் தரமாக இருக்கும்.
⦁ பெண்களின் விருப்பத்திற்கேற்ப தேவையான டிசைனில் சிறந்த முறையில் சரியான அளவில் தயாரித்து கொடுக்கலாம். நல்ல லாபம் தரும் தொழில்.
⦁ இந்த தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட மதிப்பிடு: 3.00 லட்சம்

அரசு மானியம்: 25% UYEGP & 25-35% PMEGP Scheme
a

Wednesday, March 7, 2018

தொழில் கடன் உதவி பெற தேவையான சான்றிதழ்கள்


வங்கி தொழில் கடன் உதவி பெற தேவையான சான்றிதழ்கள்:

                தொழில் தொடங்க கடன் உதவி கேட்கும் திட்ட அறிக்கையை ஒருவர் சமர்பித்ததும், அல்லது கடன் தேவையை தெரிவித்த பின்னர் வங்கி கள ஆய்வாளர்கள் மூலம், கடன் கேட்டு வருபவர் தொழில் தொடங்க இருக்கும் இடம் மற்றும் அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் உண்மைதானா? என்பது உறுதி செய்யப்படும்.

நபார்டு, மாவட்ட தொழில் மையம் ஆகியவை அந்தந்த மாவட்டங்களில் என்ன தொழில்கள் செய்தால் லாபகரமாக இருக்கும் என்பதையும், தொழில்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அட்டவணை வெளியிட்டு உள்ளனர். தொழில்கள் தொடங்குவதற்கு அவற்றைப் பொதுமக்கள் பயன்படித்திக் கொள்ளலாம்.

திட்ட அறிக்கை, வங்கி கள ஆய்வாளர்களின் அறிக்கை, கடன் கேட்பவருக்கு இது சரியான தொழில்தானா? என்பதை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்ட நபருக்கு கடன் வழங்கலாம் என்று பாங்கி மேலாளர் முடிவு செய்வார். பின்னர் கடன்பெற விரும்புவரை அழைத்து, கடன் பெறுவதற்காக, அணுகிய வங்கிகளின் அருகே உள்ள மற்ற வங்கிகளில் கடன் பெற விரும்புவரோ அல்லது அவரது உறவினர்களோ ஏற்கனவே கடன் பெற்று இருக்கிறார்களா? என்பதை உறுதி செய்யும் பொருட்டு மற்ற வங்கிகளில் கடனில்லைசான்றிதழ் (நோ டியூ சர்டிபிகேட்) பெற வேண்டும்.

பின்னர் கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அத்துடன் வங்கிக்கு தேவையான உரிய ஆவணங்களுடன் இணைத்து கொடுக்க வேண்டும். ஒரு சில கடன் திட்டங்களுக்கு கல்வி தகுதி மாறுபடும். கடன் திட்டங்களை பொறுத்து ஆவணங்கள் மாறுபடும்.

வங்கி தொழில் தொடங்க கடன் உதவி பெறுபவர் ஒவ்வொரு கடன் திட்டத்திற்கும் ஒருவர் தனது சொந்த முதலீடாக கடன் பெறும் தொகையில் இருந்து 15% முதல் 25 சதவீதம் பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். இது வ்வொரு தொழிலுக்கு தகுந்தவாறும், வங்கி மேலாளரின் ஆலோசனை படியும் மாறுபடும்.


Related Searches


icici business loan interest rate
icici business loan emi calculator
icici business loan contact number
loans for small business without security
loan for business start up
how to get bank loan for business
icici bank business loan application form
business loan hdfc

தொழில் கடன் பெறுவது எப்படி?

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசு மூலம் செயல்படுத்தப்படும் கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன மற்றும் நேரடிக்கடன் ஒவ்வொரு நிதி ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகையை கடனாக வழங்க அரசு குறியீடு நிர்ணயித்து உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வரவு செலவு பொறுத்து இந்த குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.

            கதர் கிராம தொழில் வாரியம், தாட்கோ, மாவட்ட தொழில் மையம், நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்ற பல்வேறு நிறுவனங்கள் மூலம் வங்கிகளில் கடன் பெற்று  தொழில் தொடங்கலாம். இல்லையென்றால் வங்கி மேலாளரை நேரடியாக தொடர்பு கொண்டும் தாங்கள் செய்ய விரும்பும் தொழில் குறித்து சரியான விளக்கங்களை தெரிவித்தும் கடன் பெறலாம்.

            வங்கி மேலாளரை நேரடியாக சந்தித்து கடன்பெற விரும்புபவர்கள், தாங்கள் தொடங்க இருக்கும் தொழில் பற்றிய விளக்கங்களை திட்ட அறிக்கையாக தயாரிக்க வேண்டும். திட்ட அறிக்கையில் எவ்வளவு தொகை கடனாக வேண்டும், தொழில் தொடங்குவதற்கான மூலப்பொருள்கள் வாங்குவதற்கு எவ்வளவு செலவாகும், வாங்கும் கடனை தொழிலுக்காக எவ்வாறு முதலீடு செய்யப்போகிறீர்கள். அதில் செலவு போக தங்களுக்கு கிடைக்கும் லாப விவரம் குறித்து தெரிவிக்க வேண்டும்.

            கடன்பெற விரும்புபவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதி அல்லது தொழில் தொடங்க உள்ள பகுதி அருகில் உள்ள வங்கியில்தான் கடன் பெறுவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. அவ்வாறு அருகே உள்ள வங்கியின் மேலாளரை சந்தித்து தொழில் தொடங்கும் விவரத்தை தெரிவிக்க வேண்டும். அப்போது வங்கி மேலாளர் திட்ட விவரங்கள் கேட்பார். தொழில் தொடங்க போகிறார் என்ற விவரம் ஆகியவற்றை பார்த்து தேவைப்பட்டால், அவ்வித்தை பார்வையிட்டும் வங்கி மேலாளர் கடன் கொடுப்பது பற்றி முடிவு செய்யலாம்.

            தாங்களாகவே திட்ட அறிக்கை தயார் செய்ய முடியாதவர்கள் மாவட்ட தொழில் மையம், பேட்டை சிறுதொழில் சேவை மையம் ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ள மாதிரி திட்ட அறிக்கையை பார்த்து திட்ட அறிக்கை தயார் செய்து கொள்ளலாம்.

Related Searches

how to get business loan in india
business loan requirements
loan for business without security
loan for business start up
business loan hdfc
loan for business in sbi
how to get a loan to start a business from the government
small business loan