Wednesday, March 7, 2018

தொழில் கடன் உதவி பெற தேவையான சான்றிதழ்கள்


வங்கி தொழில் கடன் உதவி பெற தேவையான சான்றிதழ்கள்:

                தொழில் தொடங்க கடன் உதவி கேட்கும் திட்ட அறிக்கையை ஒருவர் சமர்பித்ததும், அல்லது கடன் தேவையை தெரிவித்த பின்னர் வங்கி கள ஆய்வாளர்கள் மூலம், கடன் கேட்டு வருபவர் தொழில் தொடங்க இருக்கும் இடம் மற்றும் அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் உண்மைதானா? என்பது உறுதி செய்யப்படும்.

நபார்டு, மாவட்ட தொழில் மையம் ஆகியவை அந்தந்த மாவட்டங்களில் என்ன தொழில்கள் செய்தால் லாபகரமாக இருக்கும் என்பதையும், தொழில்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அட்டவணை வெளியிட்டு உள்ளனர். தொழில்கள் தொடங்குவதற்கு அவற்றைப் பொதுமக்கள் பயன்படித்திக் கொள்ளலாம்.

திட்ட அறிக்கை, வங்கி கள ஆய்வாளர்களின் அறிக்கை, கடன் கேட்பவருக்கு இது சரியான தொழில்தானா? என்பதை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்ட நபருக்கு கடன் வழங்கலாம் என்று பாங்கி மேலாளர் முடிவு செய்வார். பின்னர் கடன்பெற விரும்புவரை அழைத்து, கடன் பெறுவதற்காக, அணுகிய வங்கிகளின் அருகே உள்ள மற்ற வங்கிகளில் கடன் பெற விரும்புவரோ அல்லது அவரது உறவினர்களோ ஏற்கனவே கடன் பெற்று இருக்கிறார்களா? என்பதை உறுதி செய்யும் பொருட்டு மற்ற வங்கிகளில் கடனில்லைசான்றிதழ் (நோ டியூ சர்டிபிகேட்) பெற வேண்டும்.

பின்னர் கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அத்துடன் வங்கிக்கு தேவையான உரிய ஆவணங்களுடன் இணைத்து கொடுக்க வேண்டும். ஒரு சில கடன் திட்டங்களுக்கு கல்வி தகுதி மாறுபடும். கடன் திட்டங்களை பொறுத்து ஆவணங்கள் மாறுபடும்.

வங்கி தொழில் தொடங்க கடன் உதவி பெறுபவர் ஒவ்வொரு கடன் திட்டத்திற்கும் ஒருவர் தனது சொந்த முதலீடாக கடன் பெறும் தொகையில் இருந்து 15% முதல் 25 சதவீதம் பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். இது வ்வொரு தொழிலுக்கு தகுந்தவாறும், வங்கி மேலாளரின் ஆலோசனை படியும் மாறுபடும்.


Related Searches


icici business loan interest rate
icici business loan emi calculator
icici business loan contact number
loans for small business without security
loan for business start up
how to get bank loan for business
icici bank business loan application form
business loan hdfc

தொழில் கடன் பெறுவது எப்படி?

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசு மூலம் செயல்படுத்தப்படும் கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன மற்றும் நேரடிக்கடன் ஒவ்வொரு நிதி ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகையை கடனாக வழங்க அரசு குறியீடு நிர்ணயித்து உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வரவு செலவு பொறுத்து இந்த குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.

            கதர் கிராம தொழில் வாரியம், தாட்கோ, மாவட்ட தொழில் மையம், நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்ற பல்வேறு நிறுவனங்கள் மூலம் வங்கிகளில் கடன் பெற்று  தொழில் தொடங்கலாம். இல்லையென்றால் வங்கி மேலாளரை நேரடியாக தொடர்பு கொண்டும் தாங்கள் செய்ய விரும்பும் தொழில் குறித்து சரியான விளக்கங்களை தெரிவித்தும் கடன் பெறலாம்.

            வங்கி மேலாளரை நேரடியாக சந்தித்து கடன்பெற விரும்புபவர்கள், தாங்கள் தொடங்க இருக்கும் தொழில் பற்றிய விளக்கங்களை திட்ட அறிக்கையாக தயாரிக்க வேண்டும். திட்ட அறிக்கையில் எவ்வளவு தொகை கடனாக வேண்டும், தொழில் தொடங்குவதற்கான மூலப்பொருள்கள் வாங்குவதற்கு எவ்வளவு செலவாகும், வாங்கும் கடனை தொழிலுக்காக எவ்வாறு முதலீடு செய்யப்போகிறீர்கள். அதில் செலவு போக தங்களுக்கு கிடைக்கும் லாப விவரம் குறித்து தெரிவிக்க வேண்டும்.

            கடன்பெற விரும்புபவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதி அல்லது தொழில் தொடங்க உள்ள பகுதி அருகில் உள்ள வங்கியில்தான் கடன் பெறுவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. அவ்வாறு அருகே உள்ள வங்கியின் மேலாளரை சந்தித்து தொழில் தொடங்கும் விவரத்தை தெரிவிக்க வேண்டும். அப்போது வங்கி மேலாளர் திட்ட விவரங்கள் கேட்பார். தொழில் தொடங்க போகிறார் என்ற விவரம் ஆகியவற்றை பார்த்து தேவைப்பட்டால், அவ்வித்தை பார்வையிட்டும் வங்கி மேலாளர் கடன் கொடுப்பது பற்றி முடிவு செய்யலாம்.

            தாங்களாகவே திட்ட அறிக்கை தயார் செய்ய முடியாதவர்கள் மாவட்ட தொழில் மையம், பேட்டை சிறுதொழில் சேவை மையம் ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ள மாதிரி திட்ட அறிக்கையை பார்த்து திட்ட அறிக்கை தயார் செய்து கொள்ளலாம்.

Related Searches

how to get business loan in india
business loan requirements
loan for business without security
loan for business start up
business loan hdfc
loan for business in sbi
how to get a loan to start a business from the government
small business loan

Sunday, March 4, 2018

தொழில் முனைவோருக்கு உதவும் இதர நிறுவனங்கள்


தொழில்முனைவோருக்கு உதவும் இதர நிறுவனங்கள்( Organizations Helpful for Eunterprenuers)

1)தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் , (டிஐஐசி) 27 ஒயிட்ஸ் ரோடு, சென்னை – 600014, போன் : 24331485
தொழிற்சாலைஅமைக்க நிலம், கட்டடம், இயந்திரங்கள்ஆகியவை வாங்க தமிழ்நாடு தொழில்முதலிட்டுக் கழகம் சுலபமான நிபந்தனைகளின்பேரில் நீண்ட கால, மத்தியகாலக் கடன்களை வழங்குகிறது. உலகவங்கி கடனுதவித் திட்ட்த்தின் கீழ், இயந்திரங்களை அயல்நாடுகளிலிருந்துஇறக்குமதி செய்ய, தொழில் நுட்பஉதவி ஆகியவற்றிற்கும் கடன்கள் பெறலாம். சிறியதொழில்களுக்குக் கடன்  தொடங்குவோர், மின்சார உற்பத்தி இயந்திரங்கள் வாங்க விரும்புவோர்,போக்குவரத்துபேருந்து நட்த்துபவர்கள், கிராமங்களில் வைத்தியத் தொழில் செய்யும் மருத்துவர்கள்ஆகியோருக்கு உதவ, தனித்திட்டங்கள் பலஉள்ளன.

2)தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் (SIDCO)     கத்திப்பாரா முனை, சென்னை – 600 016.
                                சிறுதொழில் தொடங்குபவர்களுக்குப் பெருமளவில் உதவி புரிகிறது சிட்கோநிறுவனம். தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள்களை வாங்கிவினியோகிப்பது.மற்றும் தவணை முறையில்தொழிற்கூடங்களைக் கட்டிக் கொடுப்பது, உற்பத்தில்பொருள்களை ஏற்றுமதி செய்து வியாபாரங்கள் நடத்தஉதவி செய்வது, ஆகியவை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளசிறப்பான பணிகளாகும்.

3)சிறுதொழில்சேவை நிலையம்( Small Industries Service Institute),65-1,  ஜி.எஸ் டி ரோடு, சென்னை – 600 032.

                சிறுதொழிலுக்குஉதவி அளிக்க மைய அரசு, தொழில் வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ், சிறுதொழில் வளர்ச்சிக்குத்தனது விரிவாக்கப் பணியை அனைத்து வ்ழிகளிலும்சங்கிலித் தொடர்போல் செய்து வருகின்றது. புதியதொழிலைத் தேர்ந்தெடுத்து தொழில் சம்பந்தம்மான  அனைத்து விவரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இது ஆயத்த  நிலையில் உள்ள் மாதிரி திட்டங்களையும்வழங்குகிறது. தொழில் நுட்பம், இயந்திரம், மூலப்பொருள்கள் இவைகளைப் பற்றிய அனைத்து விவரங்களையும்தருகின்றது. நிர்வாகத் தொழில் நுட்ப அறிவுறைகள்வழங்குகிறது. நவீன இயந்திரங்களைப் பயன்படுத்த, அதன் செயல் முறையை விளக்குகிறது. அத்துடன் நடமாடும் செயல்முறை விளக்க ஊர்திகளின் மூலம், கிராமப்புறப் பகுதிகளில் புதிய தொழில் முனைவோரைஉருவாக்குகின்றது.
                மூலப் பொருள்களின் முழுஉபயோகம் பற்றி பரிசோதனை செய்து, அதன் பலனை சிறுதொழில்களுக்கு நல்குகிறது. சிறு தொழில்களை அரசாங்கப் பண்டக சாலையில் வாங்கும்இயக்கத்தில் ஊக்குவிக்கிறது. தொழில் மையங்கள் நிறுவதேவையான புள்ளி விவரங்களைச் சேகரித்துஅளிக்கிறது. சிறு தொழில் சம்பந்தமானமுக்கியமான விவரங்களைச் சேகரிக்கிறது. புதிய உற்பத்திப் பொருள்களுக்குள்ளவாய்ப்பு, சந்தை நிலவரம் ஆகியவற்றைஅறிந்து கூறுகிறது. சிறுதொழில் அமைப்போர்க்கு தொழில் நிர்வாகப் பயிற்சிஅளிக்கிறது.

4)தேசிய சிறு தொழில் நிறுவனம் ( என்.என்..சி),165, அண்ணாசாலை, சென்னை – 600 006.
                மைய அரசின் பார்வையின்கீழ் 1985 பிப்ரவரியில் தேசிய சிறுதொழில் நிறுவனம்தொடங்கப்பட்ட்து. இந்நிறுவனம், சிறுதொழில் வளர்ச்சிகுப் பெரிய அளவில் உதவுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள், மற்றும் உள்நாட்டு இயந்திரங்களைஇக்கழகம் சுலப தவணையில் சிறுதொழில்முனைவோர்க்கு அளிக்கிறது. அதனுடைய பயிற்சி நிலையங்களில், ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. அதனுடையவிற்பனைத்துறையில் ஏற்றுமதிப் பிரிவில், இந்திய சிறுதொழில்களில் உற்பத்தியாகும்தகுதி வாய்ந்த பொருள்களை மேலைநாட்டுலுள்ள நுகர்வோர்க்கு அறிமுகப்படுத்துகிறது.
               
5)தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் ,(SIPCOT, State Industries Promotion Corporation of Tamilnadu),19.ருக்மணி லட்சுமிபதி சாலை,எழுப்பூர்,சென்னை – 600008,போன்: 28554479

மாநிலத்தில்பரவலாகத் தொழில் வளர்ச்சியை முன்னேறச்செய்வதும், பின் தங்கியுள்ள பகுதிகள்தொழில் வளமடைய சிறப்பான வச்திகளைஅளித்தலும் சிப்காட்டின் குறிக்கோளாகும்.
                இந்நிறுவனத்தின் முன்னேற்ற நடவடிக்கைகளாவன
தொழில்வளர்ச்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களை மேம்படுத்தி, தொழில்நட்த்த்த்  தேவையானவசதிகளை ஏற்படுத்தி, சுலப தவணை முறையில்நிலப்பகுதிகளை வழங்குகிறது. தொழில் வளர்ச்சிக்காக சிலஇடங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றைச் சீர்திருத்தி, சாலை, மின்சாரம், தண்ணீர்மற்றும் வடிகால், குடிநீர் வசதிகள் முதலியவற்றை நிறைவேற்றி, தொழில் முனைவோர்க்குத் தக்க வசதிகளுடன் நிலம்வழங்கும் திட்ட்த்தை, சிப்காட் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

6)தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் மையம் (I.I.C),  டி.என்.கே.ஹவுஸ், 49, அண்ணாசாலை,  சென்னை – 600 002.
                இந்திய முதலீட்டு மையத்தின்ஆதரவில் இந்த வழி காட்டும்மையம், சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம்,தொழில் தொடங்க, ஒத்துழைப்பு, மற்றும் கூட்டு முயற்சிகள் ஆகியவற்றில்உதவுதல், போன்ற முக்கிய பணிகளைஆற்றுகிறது.

7)டி.ஜி.டீ.டி (D.G.T.D) மண்டல அலுவலகம் ,எல். மாளிகை, 735 அண்ணாசாலை, சென்னை – 600 002.
இந்நிறுவனம், நடுத்தர மற்றும் பெரிய தொழில்களைப்பதிவு செய்தல், இயந்திர இறக்குமதிக்கான அனுமதிபெறுவதில் உதவுதல், கச்சாப்பொருள்களின் இறக்குமதிக்கான உரிம்ம் பெறுவதில் உதவுதல்,போன்ற பணிகளைச் செய்துவருகிறது



Organizations Helpful for Entrepreneurs)